Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM
கோவை மண்டல உதவி செயற்பொறியாளர் (பாதுகாப்பு) கோபிதன் பேசும்போது, “விவசாய நிலங்களில் கம்பி வேலிகளுக்கு எக்காரணம் கொண்டும், விவசாயத்துக்கு பயன்படுத்தும் மின்சாரத்தையோ அல்லது வீட்டுக்கு பயன்படுத்தும் மின்சாரத்தையோ நேரடியாக பாய்ச்சக்கூடாது. தரமான பேட்டரி மற்றும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நேரடி மின்சாரம் செலுத்தி வேலி அமைத்தால், அதில் சிக்கி வன விலங்குகள் இறப்பதோடு, மனித உயிர்களும் பலியாகும் ஆபத்து உள்ளது. மின்வேலியில் வன உயிரினங்கள், மனிதர்கள் உயிரிழந்தால் சம்மந்தப்பட்ட விவசாயிகள் மீது கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படும். சிறைத் தண்டனையும் கிடைக்கும். அது மட்டுமின்றி, மின் இணைப்பும் துண்டிக்கப்படும்” என்றார்.
இதில் சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் ராஜேந்திரன், காமராஜ், சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், இரும்பரை ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT