Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

சிறுமி சந்தேக மரணம்: போலீஸார் வழக்கு பதிவு

கோவை நீலிக்கோணாம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்-தனலட்சுமி தம்பதியின் மகள் ஹேம வர்ணா (6). இந்நிலையில், தனலட்சுமியும், ஹேம வர்ணாவும் கடந்த 21-ம் தேதி மைசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு விளையாடிக்கொண்டிருந்தபோது ஹேம வர்ணாவின் விரல் கதவில் சிக்கி நசுங்கியுள்ளது. அங்கு முதலுதவிக்குப்பின், கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கடந்த 26-ம் தேதி சிறுமியை அனுமதித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 27-ம் தேதி சிறுமி உயிரிழந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சிறுமியின் தந்தை சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x