Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறித்த இருவர் கைது

நாமக்கல்: தனியாக நடந்து செல்வோரிடம் செல்போன் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த இருவரை நாமக்கல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் நேற்று முன்தினம் இரவு காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து சென்ற இருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அபுதாஹீர் (25) மற்றும் மோகன்தாஸ் (27) எனத் தெரியவந்தது.

இருவரும் தனியாக நடந்து செல்லும் பெண்கள் உள்ளிட்டோரிடம் செல்போன் பறிக்கும் செயலில் ஈடுபடுவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 9 செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x