Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM

காயங்களுடன் மீனவர் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் கூடுதாழை நடுத்தெருவை சேர்ந்த மீனவர் ஆல்ட்ரின் (47). இவரது சித்தப்பா மகனுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆல்ட்ரின் இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை பலஇடங்களில் தேடினர். இந்நிலையில் திசையன்விளை- இடைச்சிவிளை செல்லும் சாலையோரத்தில் ஆல்ட்ரின் சடலம் கிடப்பதாக திசையன் விளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவரது தலை மற்றும் நெற்றியில் பலத்த காயங்கள் இருந்தன. போலீஸார் சடலத்தை கைப்பற்றினர். ஆல்ட்ரின் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x