Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM

மீனாட்சியம்மன் கோயிலில் கதிரறுப்பு திருவிழா இன்று தெப்பத் திருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சிந்தாமணியில் நேற்று கதிரறுப்புத் திருவிழா நடைபெற்றது.

மீனாட்சியம்மன் கோயிலில் தைத் தெப்பத் திருவிழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

நேற்று பதினோறாம் நாள் விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் தங்கப் பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, காமராசர் சாலை, கீழவெளி வீதி வழியாக சிந்தாமணி கதிரறுப்பு மண்டபம் சென்றடைந்தனர். அங்கு கதிரறுப்பு திருவிழா நடைபெற்றது. மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் மண்டபத்திலிருந்து புறப் பாடாகி கோயிலை அடைந்தனர்.அதனைத்தொடர்ந்து 12-ம் நாளான இன்று காலை 5 மணியளவில் கோயிலிலிருந்து அம்மன் வெள்ளி அவுதா தொட்டில், சுவாமி வெள்ளி சிம் மாசனத்தில் புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை ரோடு, காமராசர் சாலை வழியே மீனாட்சி குடியிருப்பு திருக்கண் மண்டபம், தெப்பக்குளம் சுற்றி முக்தீஸ்வரர் கோயிலை அடைகின்றனர்.

பின்னர் காலை 10.30 மணியி லிருந்து 10.59 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெறும்.

இரவு அம்மன் வெள்ளி அவுதா தொட்டி, சுவாமி தங் கக்குதிரை வாகனத்திலும் எழுந் தருள்கின்றனர். இரவு 10 மணியளவில் மின் அலங்காரத்தில் தெப்பக்குளத்தைச் சுற்றிவந்து காமராசர் சாலை, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி தெரு வழியே கோயிலை அடைகின்றனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x