ஜெ. நினைவிட திறப்பு விழாவில் உயிரிழந்த அதிமுக தொண்டர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

பொ.மூக்கன்
பொ.மூக்கன்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்புவிழாவுக்குச் சென்ற நத்தம் அதிமுக தொண்டர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பொ.மூக்கன் (60). அதிமுக உறுப்பினரான இவர், சென்னையில் நேற்று நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள நிர்வாகிகளுடன் சென்றிருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான சிறுகுடி கொண்டு வரப்பட்டு அஞ்சலிக் காக வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in