தற்கொலை செய்த மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யாததால் கிராம மக்கள் சாலை மறியல்

தற்கொலை செய்த மாணவியின் உடலை  உடற்கூறு  ஆய்வு செய்யாததால் கிராம மக்கள் சாலை மறியல்
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகேயுள்ள சூரன்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது இளையமகள் நிவேதிதா (20). இவர் கீழக்கரையில் தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று நிவேதிதா வீட்டில் தூக்கிட்டு இறந்தார்.

இதுகுறித்து பஜார் போலீ ஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மாணவியின் உடலை ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறைக்குக் கொண்டு செல்ல ஊழியர்கள் இல்லை எனக்கூறி ஆம்புலன்ஸிலேயே வைத்திருந்தனர். இதனால் உற வினர்கள் அதிருப்தி அடைந் தனர். பின்னர் பல மணி நேரத்துக்குப் பிறகு பிரேதப் பரி சோதனை அறைக்கு மாணவியின் உடல் கொண்டு செல்லப் பட்டது.

இந்நிலையில், மாணவியின் உடலை நேற்று மாலை 5 மணி வரை தரவில்லை. காரணம் கேட்டதற்கு மருத்துவர்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டிஎஸ்பி வெள்ளைத்துரை அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலைக் கைவிடச் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in