Published : 28 Jan 2021 07:18 AM
Last Updated : 28 Jan 2021 07:18 AM

கீழப்பழுவூர் மாரியம்மன், செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூ ரில் உள்ள விநாயகர், மாரியம் மன், செல்லியம்மன், வீரபத்திரர், கருப்புசாமி, மதுரைவீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பா பிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, நேற்று காலை 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடும் அதன்பின்னர் விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன், வீரபத்திரர், கருப்புசாமி, மதுரைவீரன் மற்றும் பரிவார தெய்வங் களின் கோயில்களின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற் றது. தொடர்ந்து மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கீழப்பழுவூர், கருவிடைச்சேரி, மேலப்பழுவூர் உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x