வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்
Updated on
1 min read

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி குடும்பத்தினர் 20 பேர் பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு பகுதியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வேனில் நேற்று புறப்பட்டு வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேனை ஓட்டி வந்தார். நாங்குநேரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூர் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க வேனை ஓட்டுநர் நிறுத்தினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற காஸ் சிலிண்டர் லாரி மீது மோதி வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த 20 பேர் காயமடைந்தனர்.

நாங்குநேரி டிஎஸ்பி லிசா ஸ்டெபலா தெரஸ் மற்றும் போலீஸார் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கும், வள்ளியூர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in