ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி விவகாரம் சிதம்பரத்தில் 49-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

49-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  சிதம்பரம் ராஜா முத்தையா மருத்து வக்கல்லூரி மாணவ, மாணவிகள்.
49-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்து வக்கல்லூரி மாணவ, மாணவிகள்.
Updated on
1 min read

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 49-வது நாளாக நேற்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நிர்வாகத்திற்கு உட்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மற்ற அரசு கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே வசூலிக்கக்கோரி மாணவ, மாணவிகள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகி றார்கள்.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக் கழக நிர்வாகம், கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவுஎன அனைத்தையும் தடை செய்துள்ளது.

49-வது நாளாக நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் ரகசியம்-2 என்ற தலைப்பில் நேற்று சில தகவல்களை மாணவர்கள் வெளியிட்டனர். கடந்த 2019-20-ம் ஆண்டு அரசு ரூ.1,044 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்தப் பணம் எங்கே சென்றது ? மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஏழை நோயளிகளிடம் மருந்து, மாத்திரைகள் உள் ளிட்ட அனைத்திற்கும் பணம் வாங்கப்பட்டுள்ளது என்று மாணவர்கள் சில கேள்விகளை எழுப்பி தகவல்கள் வெளியிட்டு இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in