Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

தி.மலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலையில் தொடர்ந்து 11-வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை எனக்கூறி, கடந்த பங்குனி மாதத்தில் இருந்து கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. அந்த தடை உத்தரவு 11-வது மாதமாக தை மாதத்திலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை அமலில் உள்ளதால், வரும் 28-ம் தேதி அதிகாலை 1.45 மணி முதல் 29-ம் தேதி அதிகாலை 1.35 மணிவரை பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x