Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மொழிப்போர் தியாகிகள் நினைவுதினத்தை முன்னிட்டு நேற்று சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுகசெயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலாளரும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான என்.முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இது போல திமுக சார்பில் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாலஅறவாழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதிமுக மற்றும் மாணவர் அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x