எஸ்சி, எஸ்டி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

எஸ்சி, எஸ்டி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பினர் மற்றும் கல்வி, பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், பட்டியல் இன மக்களின் தாட்கோ கடன் விண்ணப்பங்களை கிடப்பில் வைக்கும் நாமக்கல் மாவட்ட அனைத்து வங்கி மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் நிலுவையில் இருக்கும் சுமார் 800-க்கும் மேற்பட்ட பட்டியல் இனமக்களின் தாட்கோ கடன் விண்ணப்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in