கற்பூரத்தை தின்ற குழந்தை உயிரிழப்பு

கற்பூரத்தை தின்ற குழந்தை உயிரிழப்பு

Published on

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஓடைமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் யேசுராஜ். இவர், ஆலங்குளத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி நிவேதா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ராஜேஸ்வரி என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த சிலநாட்களுக்கு முன் நிவேதா தனதுமகளுக்கு திருஷ்டிக்காக கற்பூரம் சுற்றியுள்ளார். குழந்தைஅழுதுகொண்டு இருந்ததால் கற்பூர டப்பாவை விளையாடுவதற்காக குழந்தையிடம் கொடுத்துவிட்டு, திருஷ்டிக்காக சுற்றிய கற்பூரத்தை வாசலில் பற்ற வைத்துவிட்டு திரும்பி வந்துள்ளார்.

அப்போது, கற்பூர டப்பாவைதிறந்த குழந்தை ராஜேஸ்வரி, அதில் இருந்த கற்பூர வில்லையை எடுத்து விழுங்கி விட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிவேதா, குழந்தையை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in