பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

காதல் ஜோடி மகாலட்சுமி, சிவசங்கரன்.
காதல் ஜோடி மகாலட்சுமி, சிவசங்கரன்.
Updated on
1 min read

பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலு வலகத்தில் காதல் ஜோடி நேற்று தஞ்சமடைந்தது.

தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந் தவர் எலெக்ட்ரீஷியன் சிவசங்கரன் (26). இவர், அதேபகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் மகா லட்சுமி (22) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் மகாலட்சுமி யின் குடும்பத்தாருக்கு தெரியவந்ததால், அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய தொடங் கினர். இதையறிந்த காதல் ஜோடி கடந்த 17-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, திருப்பத்தூர் மாவட்டம் சின்ன உடையா முத்தூர் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணத்துக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், பாதுகாப்பு கேட்டு திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி நேற்று தஞ்சமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, 2 பேரும் மேஜர் என்பதால் அவர்களது பெற்றோரை அழைத்து பேசி மண மக்களை அனுப்பி வைக்குமாறு திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in