சரக்கு வாகனம் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு

சரக்கு வாகனம் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு

Published on

தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 30 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கல்லாநத்தம் கிராமத்துக்கு சரக்கு வாகனத்தில், துக்க நிகழ்வுக்கு புறப்பட்டனர். ஊனத்தூர் கிராமம் வழியாகச் சென்றபோது, அங்குள்ள ஏரிக்கரையில் சரக்கு வாகனம் கவிழ்ந்தது.

அதில், கருப்பன் என்பவரது மனைவி அன்னபூரணி (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருமாள் என்பவரின் மனைவி வேடம்மாள் (55) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவ்விபத்தில், 24 பேர் காயமடைந்தனர். தலைவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in