Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்ட குடிநீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள குடிநீர் கசிவுகளை சரி செய்யும் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 25-ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT