Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM

குமாரபளையத்தில் தீ செயலி விழிப்புணர்வு பிரச்சாரம்

குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் தீயணைப்புத் துறையினர் தீ செயலி குறித்து செயல்முறை விளக்கமளித்தனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் தீ எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு அவசர உதவிக்கு இதன் மூலம் அழைப்பு கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் வரும் அழைப்புகளுக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தினர் சில விநாடிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையத்தில் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலானோர் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், பதிவிறக்கம் செய்வது குறித்தும் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x