Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

குரூப் 2 தேர்வுக்கு வரும் 27-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை மே மாதம் வெளியிடப்பட உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித்தேர்வு எழுதுவோர் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x