சேலத்தில் வரும் 25-ம் தேதி குடிநீர் நிறுத்தம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சேலத்தில் வரும் 25-ம் தேதி குடிநீர் நிறுத்தம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (25-ம் தேதி) ஒரு நாள் மட்டும் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்ட குடிநீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள குடிநீர் கசிவுகளை சரி செய்யும் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 25-ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in