Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

கோரிக்கையை நிராகரித்தால் நாடாளுமன்றத்தில் போராட்டம்: திண்டுக்கல் எம்பி எச்சரிக்கை

வணிகர், வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு அளிக்க வந்த திண்டுக்கல் திமுக எம்பி வேலுச்சாமி. படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: அதிகாரிகள் எதிர்க்கட்சி எம்பிக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரிக்கும்பட்சத்தில் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துவேன் என திண்டுக்கல் திமுக எம்பி. வேலுச்சாமி எச்சரிக்கை விடுத்தார்.

தேஜஸ் விரைவு ரயில் திண்டுக்கல்லிலும், அமிர்தா விரைவு ரயில் ஒட்டன்சத்திரத்திலும் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் திண்டுக்கல் திமுக எம்பி வேலுச்சாமி மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளர் லெனினிடம் மனு அளித்தார்.

முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு எதிர்க்கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க மறுக்கிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்துள்ளேன். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனைத்து எம்பிகளையும் திரட்டி குரல் கொடுப்பேன். அதிலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் நாடாளுமன்றம் முன் மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பலகட்டப் போராட்டங்களை நடத்துவோம், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x