மாணவிக்கு பாலியல் தொல்லை  வந்தவாசி அருகே ஆட்டோ ஓட்டுநர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை வந்தவாசி அருகே ஆட்டோ ஓட்டுநர் கைது

Published on

வந்தவாசி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் வசிக்கும் 17 வயது மாணவி, வந்தவாசி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த கிராமத்தில் உள்ள உணவகத்தில் தனது பாட்டிக்கு இட்லி வாங்கிக் கொண்டு கடந்த 21-ம் தேதி இரவு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை, வந்தவாசி கோட்டை பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ்(27) என்பவர், பாட்டி வீட்டு வழியாக செல்வதாக கூறி தனது ஆட்டோவில் மாணவியை ஏற்றிச் சென்றார். பின்னர் அவர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி வழியாக சென்றபோது, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டதால், மாணவியை தாக்கியுள்ளார்.

இதையடுத்து புலிவாய் கிராமம் வழியாக சென்றபோது, ஓடும் ஆட்டோவில் இருந்து மாணவி குதித்து தப்பித்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வந்தவாசி மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷை கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in