ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேர் குண்டாஸில் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேர் குண்டாஸில் கைது
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் மேலத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த வில்வநாதன்(23), முத்துப்பாண்டி(23) உள்ளிட்ட 6 பேரை

போலீஸார் டிச.8.-ல் கஞ்சாவுடன் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை அண்ணா நகரைச் சேர்ந்த மாந்தா மகேந்திரன் (32) மீது திருப்புல்லாணி, உச்சிப்புளி காவல் நிலையங்களில் நகை பறிப்பு வழக்குகள் உள்ளன.

இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்தி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரைத்தார்.

அதன்படி ஆட்சியர் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர், கீழக்கரை போலீஸார் இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in