நெல்லையில் 100 பெண் காவலர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலியில் 32 -வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு 100 பெண் காவலர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. படம்:மு.லெட்சுமிஅருண்
திருநெல்வேலியில் 32 -வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு 100 பெண் காவலர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. படம்:மு.லெட்சுமிஅருண்
Updated on
1 min read

திருநெல்வேலியில் 32 - வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு 100 பெண் காவலர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை இணைந்து நடத்திய இப்பேரணியை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திலிருந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

ஆயுதப்படையில் தொடங்கி முன்னீர்பள்ளம் வரை நடைபெற்ற இப்பேரணியில் திருநெல்வேலி மாவட்ட பெண் காவலர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.

ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சிசில், ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் கணபதி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜேஷ், பாத்திமா பர்வீன், வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in