நெல்லையில் திமுக மறியல்

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற மறியல்.  படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற மறியல். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக் கப்பட வில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படு கின்றனர். சாலைகளை சீரமைக்காததை கண்டித்தும், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை செய்துதரவில்லை என, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து மறியல் செய்தனர். போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in