Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

3 நாட்களில் 437 பேருக்கு கரோனா தடுப்பூசி

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி பணி கடந்த 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதன்முதலாக அரசு மருத்துவக்கல்லூரி அறுவை சிகிச்சை பணியாளர் பரமேஸ்வரன் (54)என்பவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கடந்த 15-ம் தேதி வரை 11,688 பேர் முன்பதிவு செய்திருந்தனர். மாவட்டத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,விழுப்புரம் அரசு மருத்துவமனை, விக்கிரவாண்டி, சிறுவந்தாடு வட்டார அரசு மருத்துவமனைகளில் 16,17 தேதிகளில் 110 பேர் தடுப்பூசி போட்டனர். நேற்று முன்தினம் 327 பேர் என மொத்தம் 3 நாட்களில் 437 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்று சுகாதாரத்துறை அறிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x