Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

கோவைப்புதூரில் தார் சாலை அமைக்கும் பணி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்

கோவை

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், தெற்கு மண்டலத்துக்குட்பட்ட கோவைப்புதூர் ஹவுசிங் யூனிட் டபிள்யூ பிளாக், சாந்தி ஆசிரமம் சாலை ஆர் பிளாக், லட்சுமி நகர், மீனாட்சி நகர், அம்மா நகர், மருதம் நகர், சமீம் கார்டன், அண்ணா நகர் சாலை, ஓம்சக்தி நகர், காமாட்சி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர், 89-வது வார்டன் காசிநாத் கார்டனில் ரூ.22.60 லட்சம் மதிப்பில் விளையாட்டு வளாகம், உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

மேலும், ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டிடம், ரூ.64.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார். உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தபோது, அங்கிருந்த வீரர்களுடன் அமைச்சர் இறகுப் பந்து விளையாடினார். மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையர் மதுராந்தகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x