ப.வேலூரில் நாளை முதல் எள் ஏலம்

ப.வேலூரில் நாளை முதல் எள் ஏலம்
Updated on
1 min read

பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை தேங்காய் ஏலம், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. தற்போது எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்துள்ள எள்ளை மின்னணு தேசிய வேளாண்மை சந்தை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாரம்தோறும் புதன்கிழமை பகல் 1 மணியளவில் எள் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளது.

எனவே விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த எள்ளை நாளை (20-ம் தேதி) விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து பயன்பெறலாம், என ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் யோகானந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in