Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் பார்க்காமல் வாங்க வேண்டும்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் பார்க்காமல் கொள் முதல் செய்யவேண்டும் என்று கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாக மூரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

காட்டுமன்னார்கோவில் வட்டத் தில் நேரடி நெல் விதைப்பு செய்து இரு புயல்களால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த பயிர்கள் தற்போது அறுவடை நடந்து வருகிறது.பனிபெய்யக் கூடிய ஜனவரி மாதத்தில் கடும்மழை பெய்து வருகிறது.

இது விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் அறிவிக் கப்பட்ட அனைத்து இடங்களில் உடனே நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை திறக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் பார்க்காமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x