தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது

தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது
Updated on
1 min read

வேலூர் தோட்டப்பாளையம் மாதா கோயில் தெருவைச் சேர்ந் தவர் கம்பி கட்டும் தொழிலாளி வேலு (50). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் பாலாற்றுப்பகுதியில் மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதையடுத்து, வேலு உடலை கைப்பற்றிய வடக்கு காவல் துறை யினர் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, வேலூர் தோட்டப்பாளை யம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (35), ஜெகன் (32), மணிகண்டன் (19), பாலகிருஷ்ணன்(55), 17 வயதுள்ள சிறுவன் உட்பட 5 பேரும் ஒன்று சேர்ந்து முன்பகை காரணமாக ரேஷன் கடைக்கு சென்ற வேலுவை வழிமறித்து பாலாற்றங்கரைக்கு அழைத்துச் சென்று மதுபானம் கொடுத்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வேலு கொலை வழக்கில் தொடர் புடைய ஜெகன் உட்பட 5 பேரை யும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in