Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM
கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக வரும் 16-ம் தேதி முதல் 5 மையங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை கடந்த வாரம் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, வரும் 16-ம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக கோவை மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு தேவையான 73,200 கரோனா தடுப்பூசிகள் நேற்று மதியம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இங்கிருந்து, கோவைக்கு 40,600, ஈரோடுக்கு 13,800, திருப்பூருக்கு 13,500, நீலகிரிக்கு 5,300 தடுப்பூசிகள் பிரித்து அனுப்பிவைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சூலூர், மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகள், நல்லட்டி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 5 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.முதல்நாளில் ஒரு மையத்துக்கு 100 பேர் வீதம் மொத்தம் 500 பேருக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சுகாதாரப்பணியாளர்களின் விவரங்கள் ஏற்கெனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளன"என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT