Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

பறிமுதலான வாகனங்கள் 20-ம் தேதி ஏலம்

கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மதுவிலக்குக் குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள், ஒரு 3 சக்கர வாகனம், 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 7 வாகனங்கள் வரும் 20-ம் தேதி காலை 11 மணியளவில், கோவை ராமநாதபுரம் காவல் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளன.

ஏலம் எடுக்க விரும்புவோர் ராமநாதபுரம் காவல்நிலைய வளாகத்துக்குள் நிறுத்திவைக் கப்பட்டுள்ள வாகனங்களை வரும் 19-ம் தேதி மாலை 5 மணி வரை பார்வையிடலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x