Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

குறுந் தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்க கோரிக்கை

மத்திய அரசு சாலை வியாபாரிகளுக்கு தனி கடன் திட்டத்தை அறிவித்ததுபோல, குறுந் தொழில்முனைவோருக்கு எவ்வித கடன் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எனவே, குறுந் தொழில்முனைவோரின் நிலையை உணர்ந்து, குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நடப்பு கணக்கு வைத்து வரவு, செலவு செய்துவரும் வங்கிகள் மூலம், 5 சதவீத வட்டியில் நிபந்தனைகளின்றி கடன் வழங்க வேண்டும். தொழில்சார்ந்த அனைத்து மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி-யை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். மூலப் பொருட்களின் விலையை ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யவும், விலை உயராமல் கண்காணிக்கவும், அரசுப் பிரதிநிதிகள், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x