Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM
நாமக்கல்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பொன். சரஸ்வதி தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் மற்றும் பெண்களையும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி அதிமுகவினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.
திருச்செங்கோடு நகர செயலாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்லப்பன் உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT