Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மணப்பாறையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மணப்பாறையில் நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார் கட்சியின் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார்.

திருச்சி

முதல்வர் பழனிசாமியை, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அதைக் கண்டித்து அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.குமார் பேசியது: கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரைத் தொடர்ந்து உதய நிதி ஸ்டாலின் அதிமுகவினரை அவதூறாக, பண்பற்ற முறையில் பேசி வருகிறார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள். அதிமுக அரசின் நலத் திட்டங்கள் மற்றும் அடுத்த பொங்கலுக்கு அரசு ரூ.6,000 தரும் வகையில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆர்.சந்திர சேகர் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.எம்.பாலன், செ.சின்னசாமி, மாவட்ட அவைத் தலைவர் பர்வீன்கனி, இளை ஞரணி மாவட்டச் செயலாளர் சண்முக பிரபாகரன், அதிமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் இளங்கோ உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, முசிறி கைக்காட் டியில் அதிமுக திருச்சி புற நகர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் மு.பரஞ் ஜோதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எம்எல்ஏக்கள் எம்.செல்வராசு, பரமேஸ்வரி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, ப.அண்ணாவி, டி.பி.பூனாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கரூரில்...

கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக கரூர் மத்திய நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தெற்கு நகரச்செயலாளர் விசிகே ஜெயராஜ், வடக்கு நகரச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x