Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பாலம்மாள் (74). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பாலம்மாள் அணிந்திருந்த நகையை பறித்தார். இதில் நகை அறுந்ததில் 9 கிராம் எடையுள்ள ஒரு பகுதியுடன் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து குற்றாலம் காவல் நிலையத்தில் பாலம்மாள் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நகை பறிப்பில் ஈடுபட்டது வல்லத்தைச் சேர்ந்த மணிகண்டன் (45) என்பது தெரியவந்தது. மணிகண்டனை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x