Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் வஞ்சிவாக்கம், பிரளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை, ஆரணி ஆற்று வெள்ளத்தால் சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பிலான நெல் பயிர்கள் சேதமடைந்தன.
அந்த நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, நேற்று பொன்னேரியில் விவசாயிகள் கவனஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
பொன்னேரி வட்டார விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் நடந்த இந்த கவனஈர்ப்பு பேரணிக்கு போலீஸார் தடைவிதித்தனர். ஆனால், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தடையை மீறி பேரணியாக சென்றனர்.
பின்னர், விவசாயிகள் நலச் சங்க நிர்வாகிகள் 10 பேர் மட்டும் கோட்டாட்சியரை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT