Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

காங்கிரஸ் - இந்து அமைப்பினர் மோதல்

புதுச்சேரி

புதுச்சேரியில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, இந்து அமைப்பினர் மணக்குள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அதே நேரத்தில் பிரியங்கா காந்தி பிரந்த நாளையொட்டி புதுச்சேரி காங்கிரஸார் மணக்குள விநாயகர் கோயிலில் தங்கத்தேர் இழுந்தனர். அங்கு இந்து அமைப்பினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே காரை எடுக்கும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இந்து அமைப்பினர், காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து கோயில் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிழக்கு பகுதி எஸ்பி மாறன் அவர்களை அப்புறப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x