Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

ஜல்லிக்கட்டில் மகனை இழந்த தந்தை இழப்பீடு கேட்டு வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் கடந்த ஆண்டு நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரி ழந்த பார்வையாளரின் தந்தை இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை உச்சப்பரம்புமேடு பகுதி யைச் சேர்ந்த பி.குருசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனக்கு இரு மகள்கள், ஒரு மகன். இதில் மகன் அழகர் (28) கட்டிட வேலைக்குச் சென்று குடும் பத்தைக் காப்பாற்றி வந்தார். அவனி யாபுரத்தில் கடந்தாண்டு ஜனவரியில் நடந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க அழகர் சென்றிருந்தார். அப்போது ஜல்லிக்கட்டை உயர் நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு நடத்தியது.ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் உச்ச நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல்கள் பின் பற்றப்படவில்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படவில்லை. இதனால் பாதுகாப்பு வேலியைத் தாண்டிய காளை முட்டியதில் படுகாயமடைந்த அழகர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு ஜன. 17-ல் உயிரிழந்தார்.

அவனியாபுரம் போலீஸார் எனது மகன் மாடு பிடிக்க வாடிவாசலில் நின்றிருந்தபோது காளை முட்டி உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்தனர். அழகர் மாடுபிடிக்கச் செல்லவில்லை. மாடுபிடிக்கச் சென்றி ருந்தால் முன்கூட்டியே பதிவு செய்து டோக்கன் பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டைப் பார்க்கவே சென்றி ருந்தார்.

அழகர் இறப்பால் எனது குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது. முதுமையால் என்னாலும், எனது மனைவியாலும் கூலி வேலைக்குச் செல்ல முடியவில்லை. எனவே என் மகன் மரணத்துக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண் டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட் டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர், கால்நடைத் துறைச் செயலர், மதுரை ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதி பதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x