Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

திருச்சியில் செயல்பாட்டுக்கு வந்த தற்காலிக பேருந்து நிலையங்கள்

திருச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி மாநகரில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பேருந்துகள் இயக்கத்தை மாநகர குற்றம், போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையர் வேதரத்தினம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல மேலாளர் ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இதன்படி, தஞ்சாவூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள், கன்டோன்மென்ட் சோனா, மீனா தியேட்டர் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுக்கோட்டை, மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள், மன்னார்புரம் ரவுண்டானா அருகிலிருந்து இயக்கப்பட உள்ளன. மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். ஜன.19-ம் தேதி வரை இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x