Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

ராணுவ வீரர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (40). ராணுவ வீரர். இவரது மனைவி ராணி (35), மாமியார் வேண்டா(80). இந்நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ராணி கடந்த 2-ம் தேதி சென்றார். வேண்டா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நேற்று முன்தினம் வேண்டாவுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அவர் வீட்டை பூட்டிக்கொண்டு அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு விஸ்வநாதன் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 25 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர். இது குறித்து தகவலறிந்ததும் கிருஷ்ணகிரியில் இருந்து விரைந்து வந்த ராணி, குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x