Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

5 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 50 வட்டாட்சியர்களை துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு அளித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இருந்து 5 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், வட்டாட்சியர் ஜோதி, திருவள்ளூர் மாவட்ட வழங்கல் அலுவலராகவும், வட்டாட்சியர் முரளி, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பிரிவின் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாட்சியர் பானுமதி, திருப்பத்தூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராகவும், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி, கிருஷ்ணகிரி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராகவும், வட்டாட்சியர் விஜயன், திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று பணி நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x