Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM
கோவை சூலூர் சகாய மாதா நகரைச் சேர்ந்தவர் ஜோசப்(49). இவர், சூலூர் விமானப் படையில், ஆபிசர் கமாண்டராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வடவள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டுப் பூட்டை உடைத்து, 49 பவுன் நகை, ரூ.13 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவநத்து. புகாரின் பேரில் சூலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள பர்மா காலனியைச் சேர்ந்தவர் கணேஷ்(39). இவர், கடந்த 8-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் தாளவாடிக்குச் சென்று விட்டார். மீண்டும் நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளேயிருந்த 15 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT