Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வடக்கிப்பாளையத்தைச் சேர்ந்த சிவலிங்கம்(51), கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸில் அளித்த புகாரில், ‘‘நான் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறேன். கோவை சேரன் மாநகரைச் சேர்ந்த சிவக்குமார், அவரது மனைவி சத்யப்பிரியா ஆகியோர் சித்தாபுதூரில் அறுவைசிகிச்சை உபகரணங்கள் விற்கும் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள், என்னிடம் தொழில் அபிவிருத்திக்காக ரூ.5.50 கோடி கடன் வாங்கினர். பின்னர் தலைமறைவாகிவிட்டனர். சில மாதங்கள் கழித்து வேறு பெயரில் அதே தொழிலில் ஈடுபட்டனர். நான் பணத்தைக் கேட்டபோது, திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிவக்குமார், சத்யப்பிரியா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT