Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இமாம் கவுன்சில் வேண்டுகோள்

தமிழகத்தில் மத வேறுபாடுகளைக் கடந்து, சமத்துவப் பொங்கல் விழா நீண்ட காலமாக நடக்கிறது. ஆனால், பாஜகவினர் மத மோதல்களை உண்டாக்கி, தேர்தல் காலங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற தொடர்ந்து முயற்சிக்கின்றனர். வேல் யாத்திரை என்ற பெயரில் நடத்திய பொய் யாத்திரை தோல்வி அடைந்ததால், தற்போது சமத்துவப் பொங்கல் என்ற பெயரில் போலி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, திருப்பாலை பள்ளிவாசல் வழியாகப் பேரணி சென்று, கற்களையும், காலணிகளையும் வீசியதோடு, விரும்பத்தகாத கோஷங்களை எழுப்பினர். தமிழக மக்கள் ஓரணியில் நின்று பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x