Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மதுரையில் செவிலியர்கள் உண்ணாவிரதம்

6 ஆண்டுகளாகத் தொகுப்பூதியம் பெறும் 14 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்யக் கோரி மதுரை அண்ணா நகரில் செவிலியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

இதற்கு எம்ஆர்பி செவிலியர் சங்க மாநில இணைச் செயலாளர் எஸ்.கே.சுஜாதா தலைமை வகித் தார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம், மதுரை மாவட்டச் செயலாளர் நீதிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் செவிலியர் சங்க நிர் வாகிகள் பேசியதாவது:

கடந்த ஆறரை ஆண்டுகளாக தமிழகத்தில் 16,200 செவிலியர்கள் தேர்வு எழுதி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அரசு ஆணை பிறப்பித்தே பணியில் சேர்த்தது. 6 ஆண்டுகளாகியும் 14 ஆயிரம் பேருக்கு இதுவரை பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை.

நான்கு ஆண்டுகளாக ரூ.7,700, நீதிமன்ற உத்தரவால் 2 ஆண் டுகளாக ரூ.14 ஆயிரம் ஊதியம் பெறுகிறோம். பேறுகால விடுப்பு உட்பட வேறு எந்தச் சலுகையும் இல்லை. பலர் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு நிறைவேற்றவில்லை.

கரோனா பாதிப்பு காரணமாக செவிலியர்கள், குடும்பத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். வேறு எந்தத் துறையிலும் இது போன்ற தொகுப்பூதிய முறை இல்லை. பணியில் சேர்ந்ததும் நிரந்தர ஊதியம் பெறுகின்றனர். செவிலியர்களுக்கு மட்டுமே இவ்வாறு நடக்கிறது. உடனே பணி நிரந்தரம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும். இன்று பலரும் உண் ணாவிரதம் இருந்தவாறு பணியில் ஈடுபட்டனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x