Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

தா.பழூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தில் வசித்து வருபவர்கள் பாலகிருஷ்ணன்(32), ராஜேந்திரன்(30). சகோதரர்களான இருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

ராஜேந்திரன் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவரது தாயார் வீட்டில் இருந்துள்ளார். அவரை அழைக்க இரு குடும்பத்தினரும் நேற்று வாழைக்குறிச்சி கிராமத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பாலகிருஷ்ணன் அறையில் இருந்த 18 பவுன் நகைகள், ரூ.22,000 ரொக்கம், ராஜேந்திரன் அறையிலிருந்த 22 பவுன் நகைகள், ரூ.29,000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தா.பழூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x