Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. இதில், ரூ.71 லட்சத்து 42 ஆயிரத்து 913 ரொக்கம், 779 கிராம் தங்கம், 2.818 கிலோ வெள்ளி, 17 அயல்நாட்டு கரன்சிகள் இருந்தன.
கோயில் இணை ஆணையர் கே.பி அசோக்குமார் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் நந்தகுமார், விஜயராணி, கோயில் மேலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் முன்னிலையில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதற்குமுன், கடந்த டிச.28-ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT