Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

பிரசவத்தில் தாய், சேய் உயிரிழந்த விவகாரம் சந்தேக மரணம் என வழக்கு பதிவு

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத் தைச் சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி அழகம்மாள்(29). செவிலியர் பயிற்சி பெற்றவர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு ஜன.9-ம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவரது கணவர் விஜயவர்மன் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அழகம்மாளுக்கு ரத்தப்போக்கு அதிகரித்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அழகம்மாளுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர், வயிற்றிலேயே இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.

அதன்பின், அழகம்மாளுக்கு உடல்நிலை மேலும் மோசமா னதால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அழகம்மாள் உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறை யினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று அளித்த புகார் மனுவில், மருத்துவ சிகிச்சை அளிப்பதில் அஜாக்கிரதையாக செயல்பட்டு பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கர்ப்பிணி, குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சுகாதாரத் துறையினர் அளித்த புகார் தொடர்பாக போதிய ஆதாரங்கள் கிடைத்த பிறகு, உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x