Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
புதுக்கோட்டை: சென்னையில் உள்ள சுற்றுச்சூழல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் பாண்டியன். இவர், வீடு, கட்டிடம் போன்ற அனுமதிக்காக வருவோரிடம் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த மாதம் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.7 கோடி சொத்து ஆவணங்கள், 3 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் நேற்று சோதனை செய்தனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின்னர், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT